Pages

Thursday 17 March 2011

வாழ்கை

வார்த்தைகள் வாயில் வழியும் - சில
வாழ்க்கை இன்று வேதனை அடையும்,
வேர்படும் அன்பு நெஞ்சம்,
வீண்படும் வண்ண நிலவுகள் கொஞ்சம்.

வெயில் விலகும், நிழல் மறையும்,
இங்கு நடக்கிற இவ்வாழ்க்கை, நாடகம்.
எது நிரந்திரம் சொல்லு?
உணர்ச்சிகள் உயிறெடுப்பதே நிஜம்.

ஆவல் கொண்டிருப்பவன் வாழ்வில்
என்றும் தாளம் போடுவதென்ன?
கவலையும் அதன் கசப்பும்,
தேவையின்றி தேடி வரும் வெறுப்பும்!

இந்த அழிவு முடிவதில்லை,
முடிந்ததோ,ஒன்றுமே தெரியவில்லை,
தெரிந்தவர் மொழியவில்லை,
மொழிந்தவர் இங்கு அதிகமில்லை.

"வாய்த்ததை விரும்பு - எனில்
உன் வாழ்கை வளம்!"

16 comments:

Anonymous said...

தெளிவான சிந்தனை..

உணவு உலகம் said...

"வாய்த்ததை விரும்பு - எனில்
உன் வாழ்கை வளம்!"
எவ்ளோ பெரிய விஷயத்த இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டீங்க. பகிர்விற்கு நன்றி, நண்பரே!

குறையொன்றுமில்லை. said...

"வாய்த்ததை விரும்பு - எனில்
உன் வாழ்கை வளம்!" அருமையா சொல்லி இருக்கீங்க.

தமிழ் உதயம் said...

வேதனைக்கான காரணத்தை சொல்லி, அதற்கான தீர்வையும் இறுதியாக சொல்லிவிட்டீர்கள்.

Jeevan said...

வாழ்க்கை தத்துவம். அற்புதம், இவை வாழ்வில் அனைவரும் கடந்து
செல்லும் தருணம் .

ajith said...

വായ്ത്തതൈ വിരുമ്പു-
എനില്‍ ഉന്‍ വാഴ്കൈ വളം.

വാഴ്ക വളമുടന്‍...

ரிஷபன் said...

தெரிந்தவர் மொழியவில்லை,
மொழிந்தவர் இங்கு அதிகமில்லை.

கணடவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்

வாழ்க்கை அழகாய் அதன் போக்கில் கவிதையாய்..

ம.தி.சுதா said...

////ஆவல் கொண்டிருப்பவன் வாழ்வில்
என்றும் தாளம் போடுவதென்ன?///

ஆமாங்க சரியாக கூறியுள்ளீர்கள் அருமை அருமை...

இராஜராஜேஸ்வரி said...

"வாய்த்ததை விரும்பு - எனில்
உன் வாழ்கை வளம்!"/
True.

ஹேமா said...

ரவி...ஆழமான சிந்தனை.அழகாக நீங்களே சொல்லி முடித்திருக்கிறீர்கள்.ஆனாலும் மனிதமனம் தாண்டிக்கொண்டே இருக்கும் !

Asiya Omar said...

அருமை ரவி.நல்ல கருத்து.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்கள்....

வாய்த்ததை விரும்பு... வளம் தானாக வருமென்பதை...


அருமை... வாழ்த்துகள்...

MANO நாஞ்சில் மனோ said...

கவிதையும் தத்துவமும் அசத்தல்.....


കവിതൈയും തത്തുവമും അസത്തല്‍.........

vetha (kovaikkavi) said...

தெரிந்தவர் மொழியவில்லை,
மொழிந்தவர் இங்கு அதிகமில்லை.

"வாய்த்ததை விரும்பு - எனில்
உன் வாழ்கை வளம்!"

nalla vtikal. Best wishes.

vetha (kovaikkavi) said...

kavithai said ..this is Vetha.Elangathilakam
Denmark.(kovaikkavi)

Jaleela Kamal said...

///வாய்த்ததை விரும்பு - எனில்
உன் வாழ்கை வளம்!////

arumai