மருத்துவம் தேவை!
உயிருக்கல்ல,
தேவையில்லை உடலுக்கும்.
"உற்றவர் உயிர் ஊசலாட"
அதை உண்ர்ந்தும்
உடையாமல் உள்ள
உள்ளங்களுக்கு ,
மருத்துவம் தேவை!
உணவு இல்லை,
அணிய உடையுமில்லை
அன்று உயிர் வாழ்ந்தது உறவுக்கே.
இன்று உற்வுமில்லை,
இருந்தால் அதில் உயிருமில்லை,
உடன் பிறப்பும் ஊமை போல...
மனக்கவலை!!!
சிரிப்பு ஓர் மருந்து,
அதுவும் இங்கே
சிந்தனைக்கும் சிக்காத பொக்கிஷம்!
உண்மை வரம்பாகுமோ,
உடன் வளருமோ,
உறவுகள் இங்கே?
உணர்ந்து உதயம் செய்தால்,
உயிர் வளம் பெரும்,
இல்லை ,அழிவோம்,
இம்மருத்துவம் பயனின்றி,
உயிர் குணம் பெறாமல்
இந்த உடலுடன்!!!
6 comments:
hope you are upset by the relations.Don't expect -then you may not have any thing to lose.
wish you get peaceful mind!
உணர்ந்து உதயம் செய்தால்,
உயிர் வளம் பெரும்,
nalla vti. vaalthukal.
Vetha.Elangathilakam.
please visit and well come to give your words .Thank you
http://kovaikkavi.wordpress.com
Liked it
அருமை !....அருமையான கவிதை வாழ்த்துக்கள் மிக்க நன்றி
சகோ பகிர்வுக்கு .
vaazhthukkal
mullaiamuthan
Lovely Poetry; keep going always.
Post a Comment