Pages

Wednesday 17 February 2021

எங்கே

அகம் எங்கே ,

 மனம் எங்கே , 

மனிதனின் உயிர் குணம் எங்கே? 


உயிர் காக்க உதவிடும்,   

உண்மை என்றே உலவிடும் , 

ஒன்று போல நின்று தந்த, 

பாசம் எங்கே , 

பாடல் எங்கே? 


நேற்று கொண்ட ஈரம் எங்கே , 

இன்று கண்ட காலை எங்கே , 

நாளை என்றது வாழ்த்து என்றே , 

வாழ்வதெங்கே , 

வார்த்தை எங்கே? 


அறம் எங்கே , 

மரம் எங்கே ,  

மனிதனின் குதுகலம் எங்கே? 


மாற்றம் தந்த ஏமாற்றவும் , 

மழை சிந்தின மூட்டவும், 

ஒன்று போல நின்றிடாத 

அந்த நேரம் எங்கே , 

வான நீலம் எங்கே?


பிரணவம் ரவிகுமார்

No comments: