Pages

Monday 14 March 2011

அன்னையே!!

அன்னையே -நீ

கருவிலே கலந்த
கடமை கடலாய் !!
காட்சி தருவேன்-நான்
என்றுமே -உன்
பெருமை கடலாய் !


அன்னை என்று சொன்னாலே
ஒரு அருமை நிழல்!!
நெருங்கி வாழ்கிற போதிலும்
ஒரு வாடா மலர்!


நன்றி சொல்ல முடியுமா
உன் அன்புக்கு?
அதை சொல்லி நான்
வேறுபடுத்த வேண்டுமா?!


இந்த காகிதமொழிகூட
காட்சிதர காரணம் நீ!
வாழ்க்கை தூணாக நின்று
வாழ்த்தியவளும் நீ!!


வீதியிலிருந்து வீடு தந்தாய்,
வீட்டில் இருந்து வளம் புரிந்தாய்!
என் விழி துறந்து, வழிகள் காட்டி
வழி விளக்காய் நின்று வெற்றி தந்தாய்!


வாழ்கிறேன்
உனக்காகவே...

வணங்குகிறேன் -அன்னையே!
"உன் அருள் பொழிக!"

18 comments:

'பரிவை' சே.குமார் said...

Super... Romba nalla irukku...

arasan said...

அன்னையை பற்றி அழகாய் கவி வடித்த உங்களுக்கு
ஆயிரம் நன்றிகள் நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அன்னயை பற்றி அழகான கவிதை .,, அருமை

தூயவனின் அடிமை said...

//என் விழி துறந்து, வழிகள் காட்டி
வழி விளக்காய் நின்று வெற்றி தந்தாய்!//

நல்ல வரிகள்.

இராஜராஜேஸ்வரி said...

என் விழி துறந்து, வழிகள் காட்டி
வழி விளக்காய் நின்று வெற்றி தந்தாய்!


என் விழி திறந்து வழிகாட்டி விளக்கான அன்னைக்கு வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

தமிழன்னைக்கு வாழ்த்துகள்..

ajith said...

ആനന്ദിയുടെ ബ്ലോഗില്‍ രവി അഭിപ്രായമെഴുതിയത് വായിച്ചപ്പോള്‍ മനസ്സിലായി തമിഴിലെഴുതുമെന്ന്. വന്നു വായിച്ചു. അമ്മയെപ്പറ്റി ഒരു വാക്കെഴുതിയാലും അത് ഉദാത്തകവിതയായിത്തീരും. അത്രയ്ക്ക് മഹത്തരമല്ലേ ആ സ്നേഹം. (എനിക്ക് തമിഴ് വായിക്കാനും എഴുതാനും നന്നായറിയാം. ബാലകുമാരന്റെ ഒരു ഫാന്‍ ആയിരുന്നു ഞാന്‍. )

Anonymous said...

அன்னையே!
"உன் அருள் பொழிக!"

arul polliyaddum

ஹேமா said...

அம்மா என்கிற வார்த்தையே கவிதைதான்.கவிக்கு ஓர் கவி !

உணவு உலகம் said...

//அன்னை என்று சொன்னாலே
ஒரு அருமை நிழல்!!
நெருங்கி வாழ்கிற போதிலும்
ஒரு வாடா மலர்!//
ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வரிகள்.
வாழ்த்துக்கள்.

thendralsaravanan said...

முதலில் தங்களின் அழகான தமிழுக்கு வாழ்த்துக்கள்!
கேரளத்திலிருந்து இவ்வளவு அழகான கவிதை கிடைக்கும் என எதிர் பார்க்கவில்லை!

mohamedali jinnah said...

அன்னை என்று சொன்னாலே
ஒரு அருமை நிழல்!!
நெருங்கி வாழ்கிற போதிலும்
ஒரு வாடா மலர்!
WOW

நன்றி சொல்ல முடியுமா
உன் அன்புக்கு?
அன்னையின் மடல்
என் செல்லமே!உன் அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வரமுடியாது!இருக்கும்போது எப்பொழுதும் அருமை தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்?
மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?

என் செல்லமே!இப்பொழுதே உன் தாயிடம் உன்
பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள் பெற்றிடு, இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே!
http://nidurseasons.blogspot.com/#uds-search-results

goma said...

உலகத்திலேயே நன்றியும் பிரதிபலனும் எதிர்பார்க்காத அன்பு ,அன்னையிடமிருந்துதான் நமக்கு கிட்டுகிறது அன்னையைப் போற்றுவோம் ,இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

Anonymous said...

அருமை..அன்னைஎன்றால் சும்மாவா!

சமுத்ரா said...

good one sir

Thenammai Lakshmanan said...

நிச்சயம் அன்னையின் அருள்பெருகி வழியட்டும்..:)

Jeevan said...

awesome... mother.

padmaja said...

Each line is very meaningful, a touching tribute to motherhood.. enjoyed all your other poems too,all the best for more to come..
Thanbks for your visit and feed back, appreciate it.